Thirukkuralagam
Kural 69 of 1330

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.

Eendra Pozhudhin Peridhuvakkum Thanmakanaich Chaandron Enakketta Thaai

When mother hears him named 'fulfill'd of wisdom's lore,'Far greater joy she feels, than when her son she bore

விளக்கம் — மு. வரதராசன்

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.

விளக்கம் — கலைஞர்

நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்

Meaning (English)

The mother who hears her son called “a wise man” will rejoice more than she did at his birth.

Open the interactive app →