Thirukkuralagam
Kural 692 of 1330

மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும்.

Mannar Vizhaipa Vizhaiyaamai Mannaraal Manniya Aakkan Tharum

To those who prize not state that kings are wont to prize,The king himself abundant wealth supplies

விளக்கம் — மு. வரதராசன்

அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்.

விளக்கம் — கலைஞர்

மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்

Meaning (English)

For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.

Open the interactive app →