Thirukkuralagam
Kural 718 of 1330

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

Unarva Thutaiyaarmun Sollal Valarvadhan Paaththiyul Neersorin Thatru

To speak where understanding hearers you obtain,Is sprinkling water on the fields of growing grain

விளக்கம் — மு. வரதராசன்

தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.

விளக்கம் — கலைஞர்

உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்

Meaning (English)

Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).

Open the interactive app →