Thirukkuralagam
Kural 72 of 1330

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.

Anpilaar Ellaam Thamakkuriyar Anputaiyaar Enpum Uriyar Pirarkku

The loveless to themselves belong alone; The loving men are others' to the very bone

விளக்கம் — மு. வரதராசன்

அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்

விளக்கம் — சாலமன் பாப்பையா

அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்

விளக்கம் — கலைஞர்

அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்

Meaning (English)

Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.

Open the interactive app →