Thirukkuralagam
Kural 732 of 1330

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு.

Perumporulaal Pettakka Thaaki Arungettaal Aatra Vilaivadhu Naatu

That is a 'land' which men desire for wealth's abundant share,Yielding rich increase, where calamities are rare

விளக்கம் — மு. வரதராசன்

மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.

விளக்கம் — கலைஞர்

பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்

Meaning (English)

A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes.

Open the interactive app →