Thirukkuralagam
Kural 742 of 1330

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்.

Manineerum Mannum Malaiyum Aninizhar Kaatum Utaiya Tharan

A fort is that which owns fount of waters crystal clear,An open space, a hill, and shade of beauteous forest near

விளக்கம் — மு. வரதராசன்

மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்.

விளக்கம் — கலைஞர்

ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்

Meaning (English)

A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests.

Open the interactive app →