Thirukkuralagam
Kural 747 of 1330

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண்.

Mutriyum Mutraa Therindhum Araippatuththum Patrar Kariyadhu Aran

A fort should be impregnable to foes who gird it round,Or aim there darts from far, or mine beneath the ground

விளக்கம் — மு. வரதராசன்

முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண்.

விளக்கம் — கலைஞர்

முற்றுகையிட்டோ, முற்கையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்

Meaning (English)

A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.

Open the interactive app →