Thirukkuralagam
Kural 771 of 1330

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர்.

Ennaimun Nillanmin Thevvir Palarennai Munnindru Kalnin Ravar

Ye foes stand not before my lord for many a oneWho did my lord withstand, now stands in stone

விளக்கம் — மு. வரதராசன்

பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர்.

விளக்கம் — கலைஞர்

போர்களத்து வீரன் ஒருவன், ``பகைவயர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்'' என முழங்குகிறான்

Meaning (English)

O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues.

Open the interactive app →