Thirukkuralagam
Kural 774 of 1330

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்.

Kaivel Kalitrotu Pokki Varupavan Meyvel Pariyaa Nakum

At elephant he hurls the dart in hand; for weapon pressed,He laughs and plucks the javelin from his wounded breast

விளக்கம் — மு. வரதராசன்

கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான்.

விளக்கம் — கலைஞர்

கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாயந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்

Meaning (English)

The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly).

Open the interactive app →