Thirukkuralagam
Kural 776 of 1330

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து.

Vizhuppun Pataadhanaal Ellaam Vazhukkinul Vaikkumdhan Naalai Etuththu

The heroes, counting up their days, set down as vainEach day when they no glorious wound sustain

விளக்கம் — மு. வரதராசன்

வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான்

விளக்கம் — கலைஞர்

ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்

Meaning (English)

The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds.

Open the interactive app →