Thirukkuralagam
Kural 779 of 1330

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

Izhaiththadhu Ikavaamaich Chaavaarai Yaare Pizhaiththadhu Orukkir Pavar

Who says they err, and visits them scorn,Who die and faithful guard the vow they've sworn

விளக்கம் — மு. வரதராசன்

தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?

விளக்கம் — கலைஞர்

சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது

Meaning (English)

Who would reproach with failure those who seal their oath with their death ?

Open the interactive app →