Thirukkuralagam
Kural 792 of 1330

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்.

Aaindhaaindhu Kollaadhaan Kenmai Kataimurai Thaansaam Thuyaram Tharum

Alliance with the man you have not proved and proved again,In length of days will give you mortal pain

விளக்கம் — மு. வரதராசன்

ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.

விளக்கம் — கலைஞர்

திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்

Meaning (English)

The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.

Open the interactive app →