Thirukkuralagam
Kural 794 of 1330

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

Kutippirandhu Thankan Pazhinaanu Vaanaik Kotuththum Kolalventum Natpu

Who, born of noble race, from guilt would shrink with shame,Pay any price so you as friend that man may claim

விளக்கம் — மு. வரதராசன்

உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

விளக்கம் — கலைஞர்

பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்

Meaning (English)

The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing.

Open the interactive app →