Kural 835 of 1330
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு.
Orumaich Cheyalaatrum Pedhai Ezhumaiyum Thaanpuk Kazhundhum Alaru
The fool will merit hell in one brief life on earth,In which he entering sinks through sevenfold round of birth
விளக்கம் — மு. வரதராசன்
எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.
விளக்கம் — கலைஞர்
தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்
Meaning (English)
A fool can procure in a single birth a hell into which he may enter and sufer through all the seven births.