Kural 85 of 1330
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.
Viththum Italventum Kollo Virundhompi Michchil Misaivaan Pulam
Who first regales his guest, and then himself supplies,O'er all his fields, unsown, shall plenteous harvests rise
விளக்கம் — மு. வரதராசன்
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?
விளக்கம் — சாலமன் பாப்பையா
விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?
விளக்கம் — கலைஞர்
விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?
Meaning (English)
Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?