Thirukkuralagam
Kural 853 of 1330

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும்.

Ikalennum Evvanoi Neekkin Thavalillaath Thaavil Vilakkam Tharum

If enmity, that grievous plague, you shun,Endless undying praises shall be won

விளக்கம் — மு. வரதராசன்

ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.

விளக்கம் — கலைஞர்

மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்

Meaning (English)

To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame.

Open the interactive app →