Thirukkuralagam
Kural 855 of 1330

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிக்லூக்கும் தன்மை யவர்.

Ikaledhir Saaindhozhuka Vallaarai Yaare Mikalookkum Thanmai Yavar

If men from enmity can keep their spirits free,Who over them shall gain the victory

விளக்கம் — மு. வரதராசன்

இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?

விளக்கம் — கலைஞர்

மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை

Meaning (English)

Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?

Open the interactive app →