Kural 859 of 1330
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு.
Ikalkaanaan Aakkam Varungaal Adhanai Mikalkaanum Ketu Thararku
Men think not hostile thought in fortune's favouring hour,They cherish enmity when in misfortune's power
விளக்கம் — மு. வரதராசன்
ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.
விளக்கம் — கலைஞர்
ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான் ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்
Meaning (English)
At the approach of wealth one will not think of hatred (but) to secure one’s ruin, one will look to its increase.