Thirukkuralagam
Kural 863 of 1330

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு.

Anjum Ariyaan Amaivilan Eekalaan Thanjam Eliyan Pakaikku

A craven thing! knows nought, accords with none, gives nought away; To wrath of any foe he falls an easy prey

விளக்கம் — மு. வரதராசன்

ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.

விளக்கம் — கலைஞர்

அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்

Meaning (English)

In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.

Open the interactive app →