Thirukkuralagam
Kural 870 of 1330

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லா தொளி.

Kallaan Vekulum Siruporul Egngnaandrum Ollaanai Ollaa Tholi

The task of angry war with men unlearned in virtue's loreWho will not meet, glory shall meet him never more

விளக்கம் — மு. வரதராசன்

கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது் புகழ் சேராது.

விளக்கம் — கலைஞர்

போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்

Meaning (English)

The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe).

Open the interactive app →