Thirukkuralagam
Kural 884 of 1330

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவும் தரும்.

Manamaanaa Utpakai Thondrin Inamaanaa Edham Palavum Tharum

If secret enmities arise that minds pervert,Then even kin unkind will work thee grievous hurt

விளக்கம் — மு. வரதராசன்

மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும்.

விளக்கம் — கலைஞர்

மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்

Meaning (English)

The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disafection among (one’s) relations.

Open the interactive app →