Thirukkuralagam
Kural 890 of 1330

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று.

Utampaatu Ilaadhavar Vaazhkkai Kutangarul Paampotu Utanurain Thatru

Domestic life with those who don't agree,Is dwelling in a shed with snake for company

விளக்கம் — மு. வரதராசன்

அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

மனப்பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.

விளக்கம் — கலைஞர்

உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்

Meaning (English)

Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.

Open the interactive app →