Thirukkuralagam
Kural 892 of 1330

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும்.

Periyaaraip Penaadhu Ozhukir Periyaaraal Peraa Itumpai Tharum

If men will lead their lives reckless of great men's will,Such life, through great men's powers, will bring perpetual ill

விளக்கம் — மு. வரதராசன்

ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.

விளக்கம் — கலைஞர்

பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்

Meaning (English)

To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.

Open the interactive app →