Kural 895 of 1330
யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர்.
Yaantuch Chendru Yaantum Ularaakaar Vendhuppin Vendhu Serappat Tavar
Who dare the fiery wrath of monarchs dread,Where'er they flee, are numbered with the dead
விளக்கம் — மு. வரதராசன்
மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.
விளக்கம் — சாலமன் பாப்பையா
பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.
விளக்கம் — கலைஞர்
மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது
Meaning (English)
Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go.