Kural 9 of 1330
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.
Kolil Poriyin Kunamilave Enkunaththaan Thaalai Vanangaath Thalai
Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,Who stands, like palsied sense, is to all living functions dead
விளக்கம் — மு. வரதராசன்
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்
விளக்கம் — சாலமன் பாப்பையா
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே
விளக்கம் — கலைஞர்
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்
Meaning (English)
The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.