Kural 904 of 1330
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று.
Manaiyaalai Anjum Marumaiyi Laalan Vinaiyaanmai Veereydha Lindru
No glory crowns e'en manly actions wroughtBy him who dreads his wife, nor gives the other world a thought
விளக்கம் — மு. வரதராசன்
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
விளக்கம் — சாலமன் பாப்பையா
தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.
விளக்கம் — கலைஞர்
மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை
Meaning (English)
The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.