Thirukkuralagam
Kural 906 of 1330

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர்.

Imaiyaarin Vaazhinum Paatilare Illaal Amaiyaardhol Anju Pavar

Though, like the demi-gods, in bliss they dwell secure from harm,Those have no dignity who fear the housewife's slender arm

விளக்கம் — மு. வரதராசன்

மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.

விளக்கம் — கலைஞர்

அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது

Meaning (English)

They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods.

Open the interactive app →