Thirukkuralagam
Kural 908 of 1330

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட் டாங்கு ஒழுகு பவர்.

Nattaar Kuraimutiyaar Nandraatraar Nannudhalaal Pettaangu Ozhuku Pavar

Who to the will of her with beauteous brow their lives conform,Aid not their friends in need, nor acts of charity perform

விளக்கம் — மு. வரதராசன்

மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.

விளக்கம் — கலைஞர்

ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்

Meaning (English)

Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.

Open the interactive app →