Thirukkuralagam
Kural 913 of 1330

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏத஧ல் பிணந்தழீஇ அற்று.

Porutpentir Poimmai Muyakkam Iruttaraiyil Edhil Pinandhazheei Atru

As one in darkened room, some stranger corpse inarms,Is he who seeks delight in mercenary women's charms

விளக்கம் — மு. வரதராசன்

பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.

விளக்கம் — கலைஞர்

விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்

Meaning (English)

The false embraces of wealth-loving women are like (hired men) embracing astrange corpse in a dark room.

Open the interactive app →