Thirukkuralagam
Kural 925 of 1330

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்.

Kaiyari Yaamai Utaiththe Porulkotuththu Meyyari Yaamai Kolal

With gift of goods who self-oblivion buys,Is ignorant of all that man should prize

விளக்கம் — மு. வரதராசன்

விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

விலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.

விளக்கம் — கலைஞர்

ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்

Meaning (English)

To give money and purchase unconsciousness is the result of one’s ignorance of (one’s own actions).

Open the interactive app →