Thirukkuralagam
Kural 937 of 1330

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்.

Pazhakiya Selvamum Panpum Ketukkum Kazhakaththuk Kaalai Pukin

Ancestral wealth and noble fame to ruin haste,If men in gambler's halls their precious moments waste

விளக்கம் — மு. வரதராசன்

சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.

விளக்கம் — கலைஞர்

சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்

Meaning (English)

To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character.

Open the interactive app →