Kural 96 of 1330
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்
Allavai Theya Aramperukum Nallavai Naati Iniya Solin
Who seeks out good, words from his lips of sweetness flow; In him the power of vice declines, and virtues grow
விளக்கம் — மு. வரதராசன்
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
விளக்கம் — கலைஞர்
தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்
Meaning (English)
If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.