Thirukkuralagam
Kural 992 of 1330

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு.

Anputaimai Aandra Kutippiraththal Ivvirantum Panputaimai Ennum Vazhakku

Benevolence and high born dignity,These two are beaten paths of courtesy

விளக்கம் — மு. வரதராசன்

அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்.

விளக்கம் — கலைஞர்

அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்

Meaning (English)

Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all.

Open the interactive app →