Thirukkuralagam
Kural 996 of 1330

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்.

Panputaiyaarp Pattuntu Ulakam Adhuindrel Manpukku Maaivadhu Man

The world abides; for 'worthy' men its weight sustainWere it not so, 'twould fall to dust again

விளக்கம் — மு. வரதராசன்

பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும்.

விளக்கம் — கலைஞர்

உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும் இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்

Meaning (English)

The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish.

Open the interactive app →