Thirukkuralagam
Kural 998 of 1330

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை.

Nanpaatraar Aaki Nayamila Seyvaarkkum Panpaatraar Aadhal Katai

Though men with all unfriendly acts and wrongs assail,'Tis uttermost disgrace in 'courtesy' to fail

விளக்கம் — மு. வரதராசன்

நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தம்முடன் நட்புச் செய்யாமல் பகைமை கொண்டு தீமையே செய்பவர்க்கும் கூடப் பண்பற்றவராய் வாழ்வது இழுக்கே.

விளக்கம் — கலைஞர்

நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்

Meaning (English)

It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hateful.

Open the interactive app →