Kural 1007 of 1330
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று.
Atraarkkondru Aatraadhaan Selvam Mikanalam Petraal Thamiyalmooth Thatru
Like woman fair in lonelihood who aged grows,Is wealth of him on needy men who nought bestows
விளக்கம் — மு. வரதராசன்
பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.
விளக்கம் — சாலமன் பாப்பையா
ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.
விளக்கம் — கலைஞர்
வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது
Meaning (English)
The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband.