Kural 1008 of 1330
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று.
Nachchap Pataadhavan Selvam Natuvoorul Nachchu Marampazhuth Thatru
When he whom no man loves exults in great prosperity,'Tis as when fruits in midmost of the town some poisonous tree
விளக்கம் — மு. வரதராசன்
பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.
விளக்கம் — சாலமன் பாப்பையா
எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.
விளக்கம் — கலைஞர்
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!
Meaning (English)
The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.