Kural 1010 of 1330
சீருடைச் செல்வர் சிறுதுனி மார வறங்கூர்ந் தனையது உடைத்து.
Seerutaich Chelvar Sirudhuni Maari Varangoorn Thanaiyadhu Utaiththu
'Tis as when rain cloud in the heaven grows day,When generous wealthy man endures brief poverty
விளக்கம் — மு. வரதராசன்
புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.
விளக்கம் — சாலமன் பாப்பையா
பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரம் மேகமே வறுமைப்பட்டது போலாம்.
விளக்கம் — கலைஞர்
சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்
Meaning (English)
The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while).