Thirukkuralagam
Kural 1009 of 1330

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர்.

Anporeeith Tharsetru Aranokkaadhu Eettiya Onporul Kolvaar Pirar

Who love abandon, self-afflict, and virtue's way forsakeTo heap up glittering wealth, their hoards shall others take

விளக்கம் — மு. வரதராசன்

பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்.

விளக்கம் — கலைஞர்

அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்

Meaning (English)

Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.

Open the interactive app →