Kural 1022 of 1330
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி.
Aalvinaiyum Aandra Arivum Enairantin Neelvinaiyaal Neelum Kuti
The manly act and knowledge full, when these combineIn deed prolonged, then lengthens out the race's line
விளக்கம் — மு. வரதராசன்
முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.
விளக்கம் — கலைஞர்
ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்
Meaning (English)
One’s family is raised by unti ring perseverance in both efort and wise contrivances.