Thirukkuralagam
Kural 1023 of 1330

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்.

Kutiseyval Ennum Oruvarkuth Theyvam Matidhatruth Thaanmun Thurum

'I'll make my race renowned,' if man shall say,With vest succinct the goddess leads the way

விளக்கம் — மு. வரதராசன்

என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.

விளக்கம் — கலைஞர்

தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்

Meaning (English)

The Deity will clothe itself and appear before him who resolves on raising his family.

Open the interactive app →