Thirukkuralagam
Kural 1038 of 1330

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு.

Erinum Nandraal Eruvitudhal Kattapin Neerinum Nandradhan Kaappu

To cast manure is better than to plough; Weed well; to guard is more than watering now

விளக்கம் — மு. வரதராசன்

ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.

விளக்கம் — கலைஞர்

உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது

Meaning (English)

Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it).

Open the interactive app →