Thirukkuralagam
Kural 1039 of 1330

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்.

Sellaan Kizhavan Iruppin Nilampulandhu Illaalin Ooti Vitum

When master from the field aloof hath stood; Then land will sulk, like wife in angry mood

விளக்கம் — மு. வரதராசன்

நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்.

விளக்கம் — கலைஞர்

உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்

Meaning (English)

If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure.

Open the interactive app →