Kural 1047 of 1330
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்.
Aranjaaraa Nalkuravu Eendradhaa Yaanum Piranpola Nokkap Patum
From indigence devoid of virtue's grace,The mother e'en that bare, estranged, will turn her face
விளக்கம் — மு. வரதராசன்
அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.
விளக்கம் — கலைஞர்
வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்
Meaning (English)
He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.