Kural 1048 of 1330
இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு.
Indrum Varuvadhu Kollo Nerunalum Kondradhu Polum Nirappu
And will it come today as yesterday,The grief of want that eats my soul away
விளக்கம் — மு. வரதராசன்
நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).
விளக்கம் — சாலமன் பாப்பையா
நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?
விளக்கம் — கலைஞர்
கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்
Meaning (English)
Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?