Kural 1049 of 1330
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.
Neruppinul Thunjalum Aakum Nirappinul Yaadhondrum Kanpaatu Aridhu
Amid the flames sleep may men's eyelids close,In poverty the eye knows no repose
விளக்கம் — மு. வரதராசன்
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
விளக்கம் — சாலமன் பாப்பையா
யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.
விளக்கம் — கலைஞர்
நெருப்புக்குள் படுத்துக் தூங்குவதைகூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்
Meaning (English)
One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.