Kural 1055 of 1330
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று இரப்பவர் மேற்கொள் வது.
Karappilaar Vaiyakaththu Unmaiyaal Kannindru Irappavar Merkol Vadhu
Because on earth the men exist, who never say them nay,Men bear to stand before their eyes for help to pray
விளக்கம் — மு. வரதராசன்
ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.
விளக்கம் — கலைஞர்
உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்
Meaning (English)
As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them.