Thirukkuralagam
Kural 1054 of 1330

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு.

Iraththalum Eedhale Polum Karaththal Kanavilum Thetraadhaar Maattu

Like giving alms, may even asking pleasant seem,From men who of denial never even dream

விளக்கம் — மு. வரதராசன்

உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.

விளக்கம் — கலைஞர்

இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவது போன்ற பெருமையுடையதாகும்

Meaning (English)

To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself);

Open the interactive app →