Thirukkuralagam
Kural 1065 of 1330

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினிய தில்.

Thenneer Atupurkai Aayinum Thaaldhandhadhu Unnalin Oonginiya Thil

Nothing is sweeter than to taste the toil-won cheer,Though mess of pottage as tasteless as the water clear

விளக்கம் — மு. வரதராசன்

தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.

விளக்கம் — கலைஞர்

கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை

Meaning (English)

Even thin gruel is ambrosia to him who has obtained it by labour.

Open the interactive app →