Thirukkuralagam
Kural 1068 of 1330

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்.

Iravennum Emaappil Thoni Karavennum Paardhaakkap Pakku Vitum

The fragile bark of beggaryWrecked on denial's rock will lie

விளக்கம் — மு. வரதராசன்

இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

வறுமைக் கடலைக் கடந்துவிட ஏறிய பிச்சை என்னும் வலு இல்லாத தோணி இருப்பதை மறைத்தல் என்னும் பாறையில் மோதப் பிளந்துபோகும்.

விளக்கம் — கலைஞர்

இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்

Meaning (English)

The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal.

Open the interactive app →